தமிழ்நாடு அரசுப் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. நகரில் உள்ள 7 பள்ளிகளில் எல்.கே மெட்ரிக் பள்ளி வளமைப் போன்று இம்முறையும் சாதனைப் படைத்துள்ளது.
கடந்த வருடங்களில் அரச பொதுத் தேர்வுகளிலும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டி வந்த இப்பள்ளி , அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகளின் படி நகரின் முதல் மூன்று இடங்களை பெற்று வாகை சூடியது.
இந்நிலையில், இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் படி, நகரில் முதலாவது இடத்தையும், மூன்றாம் இடத்தையும் இப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 53 மாணவியர் அனைவரும் தேர்ச்சிப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் , முதலாவது இடத்தைப் பெற்றுள்ள இப்பள்ளியின் மாணவி 500 க்கு 496 மதிப்பெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியின் நிறுவனத் தலைவர் மனிதநேயர் ஹாஜி S. அக்பர்ஷா அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படி இயங்கும் இப்பள்ளி, எதிர் காலத்திலும் சிகரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.
===================================================================================================
மதிப்பெண்கள் விபரம்
நகரில் முதல் இடம் பெற்றவர்
ஃபாத்திமா ரியாஸா : 496/500
நகரில் மூன்றாம் இடம் பெற்றவர்
நஃபீஸா ஸஹ்லா : 494/500
=======================================================================================
தகவல்: பள்ளி நிர்வாகம்