காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சார்ந்த குளம் M.I. சபீர் அஹமது அவர்கள் , சனிக்கிழமை 29 -04 -2017 இன்று அதிகாலை 4.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது 44 .
அன்னார் ,மர்ஹூம் குளம் மூஸா நெய்னா அவர்களின் மகன் வழிப் பேரனும் , மர்ஹூம் சொளுக்கு S.E. செய்யது இஸ்மாயில் அவர்களின் மகள் வழிப் பேரனும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி , சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகியவைகளின் முன்னாள் தலைமை ஆசிரியரும், முஹைதீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் இயக்குனர் மற்றும் கணித ஆசிரியரும் , K.A. மேனிலைப்பள்ளியின் முன்னாள் கணித ஆசிரியருமான மர்ஹூம் குளம் M.S. முஹம்மது இபுறாஹீம் என்ற இபுறாஹீம் சார்அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஹாஜி S.A.K. தைக்கா அப்பா அவர்களின் பேரனின் மருமகனும், மர்ஹூம் S.M.K. மஹ்மூது லெப்பை அவர்களின் மகனின் மருமகனும், மர்ஹூம் பூச்சை S.N. மொகுதூம் அப்துல் காதிர் அவர்களின் மகளின் மருமகனும் , ஹாஜி S.M.L. தைக்கா தம்பி அவர்களின் மருமகனுமான இவர்கள்,
ஹாஜி குளம் அல் அமான் செய்யதகமது கபீர் அவர்களின் காக்காவின் மகனும், ஹாஜி சொளுக்கு S.E. செய்தகமது , ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ் அவர்களின் மருமகனும் ஆவார்கள்.
மேலும் அன்னார் , ஹாஜி குளம் M.I. மூஸா நெய்னா , ஜனாப் குளம் M.I. முஹம்மது தம்பி ,ஜனாப் குளம் M.I. செய்யது இஸ்மாயில் , ஜனாப் குளம் M.I. பஷீர் அலி , ஜனாப் குளம் M.I. பைசல் அஹமது ஆகியோரின் சகோதரரும்,
ஜனாப் S.M.L. மஹ்மூது லெப்பை , ஜனாப் S.M.L. மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும், ஹாஜி S.H. அஹமது முஹைதீன் அவர்களின் சகலையும், குளம் S.A. முஹம்மது இபுறாஹீம் அவர்களின் தந்தையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் , 29-04-2017 சனிக்கிழமை இன்று மாலை 5.00 மணியளவில் குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .