காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.ஷெய்க் நூருத்தீன் 18 -04 -2017 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 3.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . அவருக்கு வயது 65.
அன்னார், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் சொளுக்கு எஸ்.எம்.கபீர் அவர்களின் மருமகனாரும், எஸ்.ஏ.சி.இல்யாஸ், எஸ்.ஏ,சி.முல்தஸிம் ஆகியோரின் சகோதரரும்,
எஸ்.என்.ஸுல்தான் அப்துல் காதிர் அவர்களின் தந்தையும், ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்களின் மாமனாரும்,
ஐ.செய்யிது அஹ்மது கபீர், ஐ.சுல்தான் அப்துல் காதிர் ஆகியோரின் பெரிய தந்தையுமாவார்கள் .
இவர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியரும், ஹாங்காங் தமிழ்ச் சங்கம், ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் ஆகியவற்றின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் குருவித்துறைப் பள்ளியியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் இணைக்கப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி : S.K. ஸாலிஹ்