புலவர் ஆபுதீன்
வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகூர், இஸ்லாம் எனும் நெறி கமழும் வளமார் பதி என்பதோடு இன்பத் தமிழ் வளர்த்த பெரும் புலவர்கள் பிறந்து சிறந்த பேரூர் .
புகழ் பூத்த இப்பெருநகரில் வாழ்ந்து மறைந்தவர்களில் ஒருவர் புலவர் ஆபுதீன் அவர்களாகும். எண்ணற்ற இஸ்லாமிய பாடல்களை தமிழ் கூறும் நல்லுகற்கிற்கு அர்ப்பணித்த பெருமகனார் ஆவார் .
இவர் எழுதிய அழகின் முன்னறிவு மற்றும் இஸ்லாமிய பாடல்கள் ஆகிய இரு நூற்கள் கிடைத்துள்ளன . இவை மறு வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.
இருப்பினும், புலவர் அவர்கள் எழுதிய ஏனைய பாடல்களின் தொகுப்பான தேன் கூடு, நவநீத கீதம், முஸ்லீம் லீக் பாடல்கள் ஆகிய நூற்கள் பற்றிய தகவல்களும் ,புலவர் குறித்த தகவல்களும் எவரிடமேனும் இருக்குமேயானால் தயவுக் கூர்ந்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
சிறப்புக்குரிய இந்தத் தொகுப்புப் பணியை முனைவர் ப. இபுறாஹிம் அவர்கள் மேற்கொண்டுள்ளார் .
எனவே, முற்குறிப்பிட்ட தகவல் தர வாய்ப்புடையோர் , முனைவர் அவர்களுடன் உரிய வழிகளில் தொடர்புக் கொண்டு ஒத்துழைக்குமாறு பரிந்துரை செய்கிறோம்.
தொடர்பு முகவரி: முனைவர் ப.இபுறாஹிம் , தமிழ்துறைத் தலைவர் , டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரி, இளையான் குடி, சிவகங்கை மாவட்டம். அலைபேசி எண்: 94424 54544
மேலும், காயல் S.E. அமானுல்லாஹ் அவர்களிடமும் தகவல்களை வழங்கலாம் . தொடர்பு அலைபேசி எண் : 94433 42222
தகவல்: முஹம்மது உமர் அன்சாரி ,காயல்பட்டினம்