காயல்பட்டினம், குத்துக்கல்தெரு, முஹியத்தீன் பள்ளி அருகில் கடந்த 32-ஆண்டுகளாக இயங்கி வரும் சமூக நல அமைப்பான ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2017, ஜனவரி மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதி ( ஹிஜ்ரி 1438 , ரபியுல் ஆகிர் பிறை- 15 ,16 ) சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள் ,
நம் உயிரினும் உயர்வான நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 33-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியினை நனிசிறப்புடன் நடாத்திட வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பறக்காத்தஹு..,
எமது ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் வருடாந்திர செயற்குழு கூட்டம் கடந்த 20-11-2016 , ஞாயிற்றுகிழமை அசருக்குப்பின் குத்துக்கல்தெரு, முஹியத்தீன் பள்ளி வளாகத்தில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஜி, எம்.எம்.முஹம்மது சுல்தான் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள். ஹாஜி புல்லாலி ஏ.ஆர்.முஹம்மது தம்பி , ஹாஜி ஊண்டி அஹமது முஹியத்தீன் , ஜனாப் சினா லேனா எஸ்.ஐச்.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். முஹியத்தீன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மீலாது பேரியம் சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஜனாப் ஆசிரியர் இசட் . ஏ . செய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதிடவும் அல்ஹாஜ் தோல்ஷாப் எம்.எல்.முஹியத்தீன் அப்துல் காதர் அனைவரையும் அகமகிழ வரவேற்றதோடு, அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் பிரபு எஸ்.ஜெ.செய்யது முஹியத்தீன் ஆலிம் ஜலாலி சூபி அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு இறுதியாக பாத்திஹா துஆ ஸலவாத்துடன் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது . அல்ஹம்துலில்லாஹ்.
முன்னதாக வெளியூர்,வெளிநாடுகளிலுள்ள அமைப்பின் நிர்வாகிகளிடம் அலைபேசிகள் மூலமும் கருத்துக்கள் கேட்டும் அவைகளையும் பரிசீலிக்கப்பட்டது,
அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்ததின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 33-ஆம் ஆண்டு விழாவை,
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2017, ஜனவரி மாதம் 14 ,15-ஆம் தேதி ( ஹிஜ்ரி 1438 , ரபியுல் ஆகிர் பிறை- 15 , 16 ) சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள் கீழ்காணும் நிகழ்முறைப்படி நனிசிறப்புடன் நடாத்திட ஒருமனதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:-
அருள்மறை குர்ஆனை அகத்திலேந்திய இளம் ஹாஃபிழ்களுக்கான ஹிஃப்ழ் போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம் பரிசு ரூபாய் 3500/- இரண்டாம் பரிசு ரூபாய் 2500/- மூன்றாம் பரிசு ரூபாய், 1500/-
இளம் மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப்போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம் பரிசு ரூபாய் 1500/-, இரண்டாம் பரிசு ரூபாய், 1000/- மூன்றாம் பரிசு ரூபாய், 750/- மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசு தொகைகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
புனிதமிகு இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முத்தான முதல் நாள் இரவு நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் , கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் MLA அவர்கள்வாழ்த்துரை வழங்கிடவும் மவ்லானா , மவ்லவி , அல்ஹாஜ் ,அல்ஹாபிழ், அப்சலுல் உலமா ஏ.அப்துல் அஜீஸ் ஆலிம் பாக்கவி M.A.,M.Phil ஹஜ்ரத் அவர்கள் ( தலைமை இமாம் , கரும்புக்கடை சுன்னத்துல் ஜமாஅத் பள்ளிவாசல் ,கோவை.) சன்மார்க்க சிறப்புரையாற்றிடவும்
மறுநாள் இரண்டாம் நாள் இரவு நேர இனிய நிகழ்விற்கு மவ்லானா , மவ்லவி , அல்ஹாஜ் ,அல்ஹாபிழ், அப்சலுல் உலமா எம்.அப்துல் ஹமீத் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் (பேராசிரியர் அல் பாக்கியதுஷ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரி ,வேலூர்.) சன்மார்க்கப் பேருரையாற்றிடவும் அழைக்கவும் முடிவு செய்தும்,
இவர்கள் யாவரையும் உடன் தொடர்பு கொண்டு அழைக்கவும் அனைவர்களும் அழைப்பினை ஏற்றும் இன்ஷா அல்லாஹ் கலந்து சிறப்பித்து தரவும் சம்மதம் தெரிவித்து கொண்டார்கள்.
பேரியத்தின் முத்தாய்ப்பு நிகழ்வான உயர் கல்விக்கான உதவித்தொகை கடந்த ஆண்டுகளைப்போல் தொடர்ந்து இவ்வருடமும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலமாக மொத்தம் முப்பது ஆயிரம் ரூபாய் பயனாளிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இப்பொழுதிலிருந்தே துவக்கி சிறப்புற செய்திடவும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழும் விழா நெருக்கத்தில் வெளியிடவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து நல்லமுறையில் நல்லாதரவுகள் ஆலோசனைகளையும் நல்கி வரும் பேரியத்தின் உறுப்பினர்கள் , நல்லுள்ளம் கொண்ட தயாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தும் இதுபோல் தொடர்ந்து தங்களது பங்களிப்பை தாராளமாக செய்யவும் , இனிய இவ்விழாவில் கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க அன்புடன் வேண்டி விரும்பி அழைக்கப்பட்டது.
சவூதி அரேபியா ,ஜித்தாவில் ்ள இப்பேரியத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்களின் கலந்தாலோசனை ஹாஜி கே.எஸ்.டி.மன்சூர் ஷேக்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்கா ஜித்தாவில் உள்ளவர்கள் கலந்தும் இவ்வருட விழாவை இறையருளால் சிறப்பாக நடத்திட நல் ஒத்துழைப்பு நல்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஏந்தல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துஆ பொருட்டால் அன்னாரின் பிறந்த நாள் பெருவிழாவை மிக விமரிசையாக நல்ல முறையில் நடாத்திடவும் இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும் வழிகளிலும் உதவியும் உபகாரமும் செய்கின்ற அனைவருக்கும் இரு உலகிலும் நல்ரஹ்மத்தும் பறகத்தும் செய்தருள்வானாக ஆமீன்.
இவ்வாறு ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் மற்றும் பொது நலப்பேரவை சார்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைப்படம் மற்றும் தகவல் : ஆசிரியர் இசட்.ஏ.செய்கு அப்துல் காதர். காயல்பட்டினம்.
சட்னி எஸ்.ஏ.கே. செய்யது மீரான், ஜித்தா.