தமிழக தொலைக்காட்சி ஊடங்களில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை பன்னெடுங் காலமாக இடம் பெறச் செய்து வரும், காயல் இளவரசு அவர்களின் அருமை மகனாரின் திருமணம் 23 -12 -2016 வெள்ளிக்கிழமை நாளை மஃரிப் தொழுகைக்குப் பின் புனித மக்காவில் உள்ள ஹரம்ஷரீபில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் R.S. ஐதுரூஸ் எனும் காயல் இளவரசு அவர்களின் மகனார் I. பியாஸுர் ரஹ்மான் B.Sc (Viscom).,( MA., LLB) மணமகனுக்கும் ,
சென்னையைச் சேர்ந்த ஹாஜி N. ஜாபர் அலி அவர்களின் மகளார் J. சுமையா B.E., மணமகளுக்கும் ,
நடைபெறவுள்ள நிக்காஹ் நிகழ்விலும் , அதைத் தொடர்ந்து மக்காவில் உள்ள அல்-நோக்கோபா 2 என்ற ஹோட்டலில் இடம்பெறும் விருந்திலும் பங்கேற்குமாறு ,
புனித மக்கா மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்களில் வாழும் காயலர்களை ஹாஜி காயல் இளவரசு, ஹாஜி N. ஜாபர் அலி மற்றும் மணமக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மணமக்கள் நல்வாழ்விற்கு துஆ செய்யுமாறு மணமக்களின் குடும்பத்தினர் அன்புடன் வேண்டுகின்றனர்.
மணவாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி சிறந்திடவும், மன்னர் நபி (ஸல் ) அவர்களின் பொருட்டால் மணமக்கள் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திடவும் வல்லோனாம் அல்லாஹ்வை உள்ளார வேண்டுகிறோம்.
ஹாஜி காயல் இளவரசு அவர்களின் தொடர்பு எண் : 0 59 729 63 85
தகவல்: காயல் இளவரசு