தூத்துக்குடி மாவட்ட சுன்னத்துல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் (SSF) சார்பில் மாவட்ட அளவிலான மாபெரும் மாணவர் முகாம் , காயல்பட்டினம் கடற்கரை முஹைதீன் பள்ளி வளாகத்தில் 30-10-2016 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெற்றது.
முதல் அமர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ,அமைப்பின் மாவட்ட தலைவர் S. முஹம்மது ஷா ஆலிம் மஹ்லரி தலைமையில் இடம்பெற்றது .
ஜனாப் M.H. புஹாரி இறைமறை ஓத துவங்கிய இந்நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஜனாப் M.Y. ஜஸ்மூத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை உரைக்குப் பின்னர் , MOI மாநில தலைவர் S. செய்யது அப்துர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி ஒழுக்கத்துடன் வாழ்வது எப்படி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நண்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்ற இரண்டாம் அமர்வில், MOI மாநில துணைத் தலைவர் அல்ஹாபிழ் H.A. அஹமது அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி தலைமை ஏற்றார் .
தலைமை உரைக்குப் பின்னர் , SSF மாநில பொதுச் செயலாளர் ஜனாப் S. சபீர் அலி MBA., அமைப்பின் வரலாறும் வடிவமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நிறைவாக, நிகழ்ச்சியில் நேரடியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு S. செய்யது அப்துர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி பதில் வழங்கினார்
S.H. மீரா சாஹிப் M.Sc., M.A., B.Ed., நன்றியுரை வழங்க , SSF துனைச் செயலாளர் அல்ஹாபிழ் முஹமம்து அன்வரி அவர்களின் துஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட SSF செயலாளர் அல்ஹாபிழ் N.M. மன்னர் அப்துல்லாஹ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
பள்ளியின் தலைவர் அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவையோருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தனர் .
நிலைப்படம் மற்றும் தகவல்: ஜஸ்மூத்தீன்