ஏக இறைவனின் திருப்பெயரால்…
தோக்கியோ ஸ்டோரி பட திரையிடல் , கருத்து பரிமாற்ற அமர்வு
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு சார்பில் பதினோராவது நிகழ்வு
இடம்: ஹனியா சிற்றரங்கம்,துஃபைல் வணிக வளாகம் விளக்கு டிரேடர்ஸ் எதிரில் ஹாஜி அப்பா தைக்கா தெரு
காயல்பட்டினம்
காலம்:
காலை 09:30 – 12:00 மணி வரை புதன்கிழமை 02 / 11 / 2016.
அன்பார்ந்த காயல் வாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்!
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் பல்வேறு தலைப்புக்களில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும், நூலாய்வுகளும் அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் பல்வேறு தஎழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் பதினொன்றாவது நிகழ்வாக எதிர்வரும் புதன்கிழமை (02/11/2016 ) காலை 09:30 மணியளவில் ஜப்பானிய திரைப்பட இயக்குனர் யசூஜிரோ ஓஸூ இயக்கிய “ தோக்கியோ ஸ்டோரி “ ஜப்பானியப்படம் – ஆங்கில துணைத் தலைப்புக்களுடன் – திரையிடப்பட உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து திரைப்படத்தின் கருப்பொருள் குறித்த கருத்து பரிமாற்ற அமர்வும் நடைபெறும்.
உலகமயமாக்கமானது கொழுத்த ஊதியங்கள் , வாழ்க்கை வசதிகளுடன் கூடிய பெரும் பணம் புழங்கக் கூடிய நவீன வாழ்வையும் , கூட்டு குடும்ப முறைக்கு மாற்றாக ஒற்றை குடும்ப வாழ்க்கையையும் இளம் தலைமுறையினரிடம் கையளித்திருக்கின்றது.
இந்த அதிரடியான வாழ்க்கை மாற்றமானது குடும்பத்தின் முதிர்ந்து கனிந்த உறுப்பினர்களை வயதான பெற்றோர்களை என்னென்ன வகையில் பாதிக்கின்றது என்பதை இந்த படம் தனக்கே உரிய கலை மொழியில் எந்த பாசாங்குமின்றி நம் அகத்துடன் உரையாடுகின்றது
நமதூரிலும் தனித்து விடப்படும் பெற்றோர் என்ற புது ரகம் மெல்ல உருவாக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவண்,எழுத்து மேடை மையம் – தமிழ் நாடு செல்: 9171324824
“““““““““““““““““““““““““““““““““““““
குறிப்பு:- எழுத்து மேடை மையம் தமிழ் நாடு – எந்த ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ சாராத சிந்தனைத் தளமாகும்.
தகவல்: Salai Basheer.