மர்ஹூம் ஹாஜி V.M.S. லெப்பை அவர்களின் பேரனுக்கு “இன நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு விரிவாக்கத்தில்” சிறப்பாக செயல்பட்டமைக்காக ஹாங்காங் அரசு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது!
ஹாங்காங் நாட்டில் பண பரிமாற்றம் செய்யும் நிறுவனமும், ஏற்றுமதி நிறுவனமும் நடத்தி வருபவர்களும், பல்வேறு பொருளாதார உதவிகளை ஹாங்காங் மற்றும் இந்தியாவிலும், விளையாட்டுத் துறையில் ஹாங்காங் மற்றும் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுக்களை நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரும்,
காயல்பட்டினம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மர்ஹூம் V.M.S. லெப்பை ஹாஜி (விளக்கு அப்பா) அவர்களின் பேரனும் அல்ஹாஜ் M.N. உவைஸ் அவர்களின் மகனுமாகிய U.முஹம்மது நூகு அவர்களுக்கு “இன நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு விரிவாக்கத்தில்” சிறப்பாக செயல்பட்டமைக்கு ஹாங்காங் “HOME AFFAIRS DEPARTMENT” பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த விழாவில் ஹாங்காங் நாட்டின் “HOME AFFAIRS DEPARTMENT” உடைய தலைமை நிர்வாக அதிகாரி Mr. K Y Cheng அவர்களும், மூத்த நிர்வாக அதிகாரி Mr. Alfred Shum கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி அனைவரையும் கவுரவித்தார்கள்.
இவ்வருடம் 43 நபர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சீன நாட்டை சேர்ந்தவர்களும், இந்தியர் ஒரு நபருக்கும், இலங்கையைச் சேர்ந்த ஒரு நபருக்கும், பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இந்த கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினைப் பெற்றதின் மூலம் ஜனாப். U.முஹம்மது நூகு அவர்கள் மர்ஹூம் V.M.S. லெப்பை ஹாஜி அவர்களின் குடும்பத்திற்கும், காயல்பட்டினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியத்திரு நாட்டிற்கும் பெருமைதேடி தந்துள்ளார்கள் என்றால் அதுமிகையாகது.
நிலைப்படம் மற்றும் தகவல்:M. ஜஹாங்கிர்