பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்த முயற்சிப்பதை கண்டித்து காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணியளவில் காயல் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல் ஹசன் கலாமி தலைமை ஏற்றார். ஏனைய நிர்வாகிகள் முன்னிலை பொறுப்பேற்றனர் .
பேரவையின் துணைத் தலைவர் அல்ஹாபிழ் S.H. பாதுல் அஸ்ஹாப் ஆலிம் பாசி இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மன்னர் பாதுல் அஸ்ஹாப் , M.T. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர் .
காயல் S.E. அமானுல்லாஹ் அறிமுக உரையாற்றினார்.
பேரவையின் செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M. சம்சுதீன் நன்றி கூறினார்.
பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அஹமது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
திரளான மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை பேரவை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். கஃபாரா துஆ மற்றும் ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிலைப்படம் : A.R. ஷேக் முஹம்மது
=====================================================================================================================
இச்செய்தியோடு தொடர்புடைய முந்தையச் செய்தியைக் காண http://www.kayalconnection.
==============================================================================================================