மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமுல் படுத்த முயற்சிப்பதை எதிர்க்கும் முகமாக நாடெங்கும் முஸ்லீம் சமூகத்திற்கிடையே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காயல்பட்டினத்தை பொறுத்தளவில் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்பாக கீழ்க்கண்ட முடிவுகளை ஐக்கிய பேரவை எடுத்துள்ளது.
இவ்வாரம் மற்றும் அடுத்த வார ஜும்ஆ பயான்களில் இது குறித்து உரை நிகழ்த்துமாறு வேண்டி கத்தீபுகளை சந்தித்து கேட்டு கொள்வது,
நம் நகரின் அனைத்து பொதுமக்களிடம் இச்சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் இன்று (20/10) முதல் வரும் 27ம் தேதி வரை நடத்துவது . இதற்காக ஐக்கிய பேரவையின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள கையெழுத்து படிவங்களை அனைத்து ஜமாஅத்துகளுக்கும் இன்று (20/10) அனுப்பி வைப்பது,
28-10-2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பின் அனைத்து பொதுமக்கள் கலந்துகொள்ளும் மாபெரும் ஆர்பாட்டம் நடத்துவது..
இன்று மாலை 4:30 மணியளவில் பேரவையின்துணை செயலாளர் ஹாஜி. A.A.C. நவாஸ் அஹமது அவர்கள் இல்லத்தில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட முடிவுகளை அறிவிப்பது
மேற்கண்டவாறு ஐக்கியப் பேரவையின் முடிவுகளை அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர் .
தகவல்:M. ஜஹாங்கிர்