காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் செயலாளர் வாவு M.M.சம்சுத்தீன் ஹாஜி, துணைச் செயலாளர் ஹாஜி S.A. ஜவாஹிர், செயற்குழு உறுப்பினர்கள் A.R. இக்பால் ஹாஜி, வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக், ஜனாப். சொளுக்கு A.J. முஹைதீன் மற்றும் ஜனாப். M.A.K. ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் இன்று (19/10) மாலை திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரகம் சென்று மனு அளித்தனர் .
காயல்பட்டினம் நகர்மன்ற வார்டுகளை சுழற்சி முறையில் பொது வார்டாகவும், பெண்கள் வார்டாகவும் அமைத்து தரும்படியும், நீண்ட காலங்களாக சுழற்சி முறை நடைமுறை படுத்தவில்லை என்றும், தலைவர் பொறுப்புக்கு சுழற்றி முறை கடைபிடிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குளறு படிகளை சரி செய்ய ஏற்பாடு செய்யும்படியும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி, மேல்நடவடிக்கைக்காக உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார் .
இதுபோன்ற மனுவை கடந்த 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையினர் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைப்படம் மற்றும் தகவல்: M. ஜஹாங்கிர்