காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் அவசரத் தேவையை முன்னிட்டு,விரைவாக சென்னை செல்லவும், சென்னையிலிருந்து ஊர் வரவும் மிகவும் பயனுள்ள வகையில் , விமானச் சேவை நடைமுறையில் இருந்து வருகிறது.
விமானம் புறப்படும், வந்தடையும் நேரம் இன்றுமுதல் கீழ்க்கண்டபடி மாற்றி அமைக்கப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து காலை 8.50 மணிக்கு ஒரு விமானம் (KINGFISHER) புறப்பட்டு, சென்னைக்கு 10.05 மணிக்கு சென்றடைகிறது.
மற்றொரு விமானம் (SPICEJET) தூத்துக்குடியிலிருந்து மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டு, 5.10 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இவ்விமானம் மாலை 6.10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 7.00 மணிக்கு பெங்களுர் சென்றடைகிறது.
அதேபோல் ஒரு விமானம் (KINGFISHER) சென்னையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 8.25 மணிக்கு தூத்துக்குடி வந்து சேருகிறது.
மற்றொரு விமானம் (SPICEJET) மதியம் 12.40 மணிக்கு பெங்களுரிலிருந்து புறப்பட்டு ,1.45 மணிக்கு சென்னை வந்தடைகிறது. அதே விமானம் மதியம் 2.05 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 3.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேருகிறது.
காயலர் நலனுக்காக இத்தகவலை தெரிவிக்கின்றோம்.