காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில், இன்று 25/11/2012 ஞாயிற்றுக்கிழமை, காலை 11.30 மணியளவில் kayalunited என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஐக்கியப் பேரவையின் துணைத் தலைவர் ஹாஜி. எஸ்.எம். மிஸ்கீன்சாஹிப் ஃபாஸி தலைமை வகித்தார்.
ஹாஜி.வாவு.எஸ்.அப்துல் கஃபார் , ஹாஜி. ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி.எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லா
கே.முஹம்மது இப்ராஹீம் கிராஅத் ஓத, ஐக்கியப் பேரவையின் துணைப் பொருளாளர் ஹாஜி. எம்.ஏ.செய்யது முஹம்மது அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இணையதளம் பற்றிய விளக்க உரையை,kayalunited முதன்மை செயல் அலுவலர் ஹாஜி, வாவு.எம்.எம்.முஹ்தஜிம் நிகழ்த்தினார்.
ஹாஜி.வாவு.எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் இணையதளத்தை துவக்கி வைத்தார்.
ஹாஜி.ஏ.கே.பீர்முஹம்மது நன்றியுரை நிகழ்த்த, ஹாஜி.வாவு.கே.எஸ்.முஹம்மது நாசர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
இறுதியாக அல்ஹாஜ் அல்ஹாபிழ். எஸ்.ஹைச். பாதுல் அஸ்ஹாப் ஆலிம் ஃபாஸியின் பாத்திஹா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
நகரப் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தகவல்:- எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் – செய்தி தொடர்பாளர் – kayalunited
Admin:– ஐக்கியப் பேரவையின் ஆலோசகர் ஹாஜி. எஸ். அக்பர்ஷா பி.ஏ. அவர்களை, நிறுவனராகக் கொண்ட kayalconnection என்ற இணையதளம், பேரவையின் kayalunited வெற்றிகரமாக தன் பயணத்தைத் தொடர, இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
நாம் அனைவரும் கரம்கோர்த்து, காயலின் உயர்வுக்கு கடமையாற்றுவோம். நம் அன்னையூருக்கு அணி சேர்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.