காயல்பட்டினம் அலியார் தெருவைச்சார்ந்த மர்ஹூம் சிராஜுத்தீன் அவர்களின் மனைவி, 84 வயது நிறைந்த
அமீர் ஹம்ஸா உம்மா அவர்கள்.
இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற, மக்கா நகர் வந்தார்கள்.
கடந்த துல்ஹஜ் பிறை 9 அன்று அரஃபாவில் தங்கி, வணக்கங்களை முடித்து, மறுநாள் பிறை 10 அதிகாலை மினாவில் வந்திறங்கிய அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கடந்த 30 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், சிகிச்சை பலனின்றி நேற்று 23.11.12 வெள்ளி அதிகாலை 4 மணியளவில் மரணமடைந்தார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழை பொறுத்து, அன்னாரின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு, மறுமையில் ‘ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸுல் அஃலா’ வெனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக! .
தகவல்
அரபி சுஹைப்,
ஜித்தா