பெங்களுரு காயல்நலமன்ற பொதுக்குழு கூட்டம் 09.12.2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 04.00 மணி முதல் 05.30 மணி வரை, Lalbag West Gate -இல் ஜனாப் S.D. ஷேக்னா தலைமையில் நடைபெற்றது. ஜனாப் ஆ.ர் மொக்தூம் முன்னிலை வகித்தார்.
ஹாஃபிழ் மக்கி இஸ்மாயில் இறைமறை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகளை தலைவர் ஜனாப் அப்துல் ரஹீம் விளக்கிப் பேசினார்.
பின்னர், மன்றத்தில் புதிதாக இணைந்து கொண்ட 3 உறுப்பினர்கள் சுயஅறிமுகம் செய்துகொண்டனர்.
வருகை தந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களின் நிறைவான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானங்கள்:
தீர்மானம் 1 – புதிய செயற்குழு
புதிய நிர்வாகக் குழுவை அங்கீகரித்தும், அவர்களின் பதவிக் காலம் இன்ஷாஅல்லாஹ் 31.12.2013 வரை என்றும், அதன் பின்னர் புதிய நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கவோ அல்லது இக்குழுவுடைய பதவி காலத்தை நீட்டிக்கவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – நன்றியும், பாராட்டும்:
நமதூர் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தாரங்கதார ரசாயன தொழிற்சாலை மத்திய மாநில அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு முற்றிலும் மாற்றமாக செயல்புரிந்து வருவதை கண்டித்து, கடந்த வாரம் நமதூரில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி நம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பிற்கும், இதற்காக எல்லா வகையிலும் நல்லாதரவு அளித்த அனைவருக்கும் நன்றியையும், பாராட்டையும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3: அடுத்த பொதுக்குழு கூட்டம் குடும்ப ஒன்றுகூடல்:
மன்றத்தின் அடுத்த 7 -ஆவது பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 2013 பிப்ரவரி மாதம் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இன்ஷாஅல்லாஹ், குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடத்திட இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மன்றக் கூட்டம்:
இனி வருங்காலங்களில், மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 : துளிர் பள்ளி வாழ்த்துகு நன்றி:
21.08.2012 அன்று துளிர் பள்ளியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் இயங்கி வரும் அடுமனைப் பிரிவில், மாவு பிசையும் கருவி வாங்குவதற்காக, பெங்களுரு காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 65,000 தொகை அனுசரணை அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் , பெங்களுரு காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களான சுலைமான், மஸாஹிர்அமீன், பத்ரிய்யா கலீல் ரஹ்மான், ஷேக் அப்துல்லாஹ், கே.கே.எஸ்.ஸாலிஹ், சுப்ஹானீ ஆகியோரும் பங்கேற்றனர். நம் அமைப்பை பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்கள். துளிர் பள்ளி அங்கத்தினருக்கு இப்பொதுக்குழு மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது.
தீர்மானம் 6 – புதுமண தம்பதியருக்கு வாழ்த்து:
அண்மையில் புதுமண வாழ்வு காண இருக்கின்ற, மன்ற உறுப்பினர்கள் மகபூப் சுபுஹனி மற்றும் ஷேக்னா லெப்பை ஆகியோருக்கு மன்றம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறது.
அத்துடன், வல்ல அல்லாஹ் இத்தம்பதியருக்கு குறைவில்லா நல்வாழ்வையும், இருலோகத்திற்கும் பயன்தரும் கண்குளிர்ச்சியான மக்கட்செல்வங்களையும் நிறைவாகத் தந்தருள இப்பொதுக்குழு பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 7 – புதிய நிர்வாகக் குழு வாழ்த்து:
ராஜஸ்தான் மாநிலம் – ஜெய்ப்பூர் காயல் நலமன்ற புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு, இப்பொதுக்குழு வாழ்த்துகளை தெரிவிக்கிறது.
பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் குழுவினர்:
ஆலோசனை குழு:
ஜனாப் M.M. அப்துல் ரஹீம் (முன்னாள் தலைவர் ) ( Crescent Design)
ஜனாப் S.D. ஷேக்னா
ஜனாப் ஆ.ர். மொக்தூம்
ஜனாப் P.M.T .அப்துர் ரஹ்மான் ( Glad Media )
தலைவர்:
ஜனாப் P.S.A.S ஜெயீத் நூர்தீன் ( I – wave systems )
துணைத் தலைவர்கள்:
ஜனாப் முஹம்மது இப்ராகிம் (Honeywell)
ஜனாப் K.K.S செய்கு முஹம்மத் ஸாலிஹ் ( ETA Star Property Developers)
செயலாளர்:
ஜனாப் M.N.சுலைமான் ( ETA Star Property Developers )
துணைச் செயலாளர்கள்:
ஹாஃபிழ் M.A.ஷேக் அப்துல்லாஹ் முஜாகிர் ( ETA Melco)
ஹாஃபிழ் மக்கி இஸ்மாயில் ( ETA Melco)
பொருளாளர்:
ஜனாப் S.O.H. மொஹிதீன் அப்துல் காதர் ( குலாம்) ( ETA Constructions )
துணைப் பொருளாளர்கள்:
ஜனாப் ஷேக் சுலைமான்
ஜனாப் M.M. வாவு முஹம்மத் ( ETA Melco )
ஒருங்கினைப்பாளர்கள்:
ஜனாப் மன்னர் B.A. அப்துர் ரஹ்மான் ( I – wave systems )
ஜனாப் S.M.N. அப்துல் காதர்; ( I – wave systems )
ஜனாப் இப்ராகிம் நௌசாத்( Coffee Day )
கூட்டத்தில், 40 உறுப்பினர்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் – சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிறைவாக, கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நன்றி கூற, ஹாஃபிழ் மன்னர் B.A. அப்துர் ரஹ்மான் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பலர் தம் மனைவி, பிள்ளைச் செல்வங்களுடன் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைவுற்றதும், அவர்கள் தமக்குள் கலந்துரையாடி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே மறுபுறத்தில் பெண்கள் தனியாக அமர்ந்து கதைத்தனர். குழந்தைகள் துள்ளி விளையாடி மகிழ்ந்தனர்.
தகவல் மற்றும் நிழற்பட உதவி
K.K.S.முஹம்மத் ஸாலிஹ், – துணைச் தலைவர்
M.N. சுலைமான் – செயலாளர்
B.A. மன்னர் அப்துர் ரஹ்மான் – ஒருங்கிணைப்பாளர்
காயல் நல மன்றம், பெங்களுரு.