காயல்பட்டினத்தில் சிலநாள் இடைவெளிக்குப் பின்னால், நேற்று அதிகாலை மழைபெய்யத் துவங்கியது.
காலை 10 மணியிலிருந்து சுமார் 1 மணிநேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை பொழிந்தது.
கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மழை முடிந்த பிறகும் மேகமூட்டமும், சாரல் துளியுமாக இன்றுவரை வானிலை நிலவுகிறது.
வான்மழை பொழியட்டும், வறண்ட நிலம் செழிக்கட்டும், வல்லவன் அருள் நிறையட்டும்.