டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவுவதால் பலர் மரணம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை இன்றளவும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அச்சத்தை விளைவிக்கும் இந்நோய்கள் நமது பகுதியில் வாழும் மக்களை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் என்ற சமூக நலஅமைப்பு இம்மாதம் 16 மற்றும் 17 ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.
மேற்குறிப்பிட்ட நோய்க்கு ஆங்கில மருந்துகளை விட சித்த மருத்துவம் சிறந்ததென பரவலாக கருத்து நிலவுகிறது. மேலும் அரசும் இம்மருத்துவத்தை முக்கியத்துவம் அளித்துப் பரிந்துரை செய்கிறது. அதன் அடிப்படையில் நடைபெறவுள்ள இம்மருத்துவ முகாமில் நிலவேம்பு குடிநீர் என்னும் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
ஞாயிறன்று ஒருமுறை இம்மருந்தை உட்கொள்கின்ற ஒருவர் அடுத்த நாளும் கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விரு நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை 5 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மருந்து வழங்கப்படும்.
மருத்துவராக டாக்டர். S.M.N. செய்யிது முஹ்யித்தீன் D.S.M. பணியாற்றுவார்.
தகவல் உதவி: முஹம்மது மெய்தீன்,
செயலாளர்: அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்.