நமது நகர எல்லைக்குள் தேங்கும் குப்பைகள், இதுவரை தனியார் நிலத்திலேயே கொட்டப்பட்டு வருகிறது அப்பகுதியில் துணைமின் நிலையம், அமைக்கும் பணி துவங்கி, அது இயங்கும் கட்டத்தை எட்டியுள்ளது மேலும் அவ்வட்டாரத்தில் தனியார் வீடுகளும் வரத் துவங்கியுள்ளன.
எனவே சில மாதங்களுக்கு முன்பு நகர மக்களுக்கு, நிலம் வேண்டி நகராட்சி விடுத்த வேண்டுகோள் ஏற்க தாமதம் ஆவதால், நகர்மன்றம் மீண்டும் அவ்வேண்டுகோளை புதுப்பித்துள்ளது.இந்நிலையில் இதற்கென நகராட்சிக்கு சொந்தமாக, ஊரின் ஒதுக்குப் புறத்தில் 5 ஏக்கர் நிலம் அவசியமாகிறது. மேலும் இந்நிலம் குப்பை கொட்டுவதற்கென அமையுமானால், இந்நிலத்திற்குள்ளேயே, 90 லட்சம் செலவு மதிப்பீட்டில், அரசு தரமுன்வரும் இயற்கை எரிவாயு மையம் ( BIO METRIC GAS PLANT ) அமையும் அரிய வாய்ப்பும் உருவாகும்.
30-11-2012 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தின் 65 ஆம் தீர்மானத்தின் படி, நிலம் வாங்க அரசு தர முன்வரும் ரூபாய் 5 லட்சம், 5 ஏக்கர் நிலம் வாங்க போதாது என்பதால், அரசிடம் 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை கேட்டு விண்ணப்பிப்பதோடு, தன்னார்வத்தொண்டு அமைப்புகளிடமும் இதே கோரிக்கையை முன்வைப்பதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அம்முடிவின் அடிப்படையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிற்வாகிகளை நேரடியாக சந்தித்து, இதற்குரிய வேண்டுதல் மனுவை, பேரவையின் ஒருங்கினைப்பாளர் ஹாஜி. S.S.M முஹம்மது இஸ்மாயீல்( முத்து ஹாஜி ) அவர்களிடம் கைஅளித்தனர்.
இந்நிகழ்ச்சி 06-12-2012 வியாழன் மாலை 5.30 மணியளவில் பேரவையில் இடம் பெற்றது. மனுவை பெற்று கொண்ட பிறகு, உடனிருந்த நிர்வாகிகள், ஆவண செய்வதாக வாக்களித்தனர்.
17 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டுள்ள, இம்மனுவை 13 உறுப்பினர்கள் பேரவையில் சமர்பித்தார்கள் வெளியூரில் உள்ள ஒரு உறுப்பினர் தொலைபேசி வாயிலாக தனது வேண்டுகோளை பதிவு செய்தார்.
அவசரமாகவும், அவசியமாகவும், தேவைப்படும் இந்நிலத்தை அரசோ, ஐக்கிய பேரவையோ வழங்கட்டும். விரைவில் செயல்வடிவம் பெற நாம் அனைவரும் துணை நிற்போம்
நிழற்படம் : முதன்மைச்செய்தி முகவர் ( kayalconnection.com )
தகவல் உதவி : M.A.K. ஜைனுல் ஆப்தீன் – பேரவை இணையதள ஒருங்கினைப்பாளர்
மற்றும் திரு.சாமி – நகர்மன்ற உறுப்பினர்.