வறியோருக்கு உதவுவதில், வளநகர் காயலின் பொதுப்பணியில் முன்னிற்பதில், தலைசிறந்து விளங்கும் சிங்கப்பூர் காயல்நலமன்றத்தின் ( KWAS ) செயற்குழுக் கூட்டம் இன்று ( 7-12-2012 ) மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
100 JALAN SULTAN #09-06, SULTAN PLAZA, SINGAPORE என்ற அலுவலகத்தில் இடம் பெறும் இக்கூட்டத்தில், நிதி திரட்டுவதில் ஒரு அங்கமான, நிதி சேமிக்கப்பட்ட உண்டியல் திறப்பு இடம்பெற உள்ளது.
செயற்குழுவினர், துணைக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறும், நிதி சேர்த்த உண்டியல்களை உறுப்பினர்கள் தவறாது கூட்டத்திற்கு எடுத்து வருமாறும் இம்மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சின்னஞ்சிறு வளநாடான சிங்கப்பூரிலிருந்து பென்னம்பெரும் பணியாற்றும் காயல்நலமன்றத்தினரை கனிவோடு வாழ்த்துகிறோம்.
தகவல்:
கே.எம்.டி. சேக்னா லெப்பை
பொருளாளர் KWAS