திருச்செந்தூர் முத்து நாடார் நினைவுக் கேடயத்திற்கான பள்ளி மாணவ, மணவியர்களுக்குரிய, பல்வேறு போட்டிகள் 30.11.2012 அன்று நடைபெற்றன. திருச்செந்தூர் SRM மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் ( SRM Nursery & Primary School ) நடைபெற்ற இப்போட்டியில் 12 பள்ளிக் கூடங்கள் பங்குபெற்றன. 5 போட்டிகள் இடம்பெற்றன.
காயல்பட்டினம் L.K. மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தமூவர் 3 போட்டிகளில் முதலிடமும் மற்றும் ஒருவர் ஒரு போட்டியில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளார்கள்.
எனவே அதிகமான முதன்மைப் பரிசுகளைப் பெற்றதினால் இப்பள்ளிக்கே வெற்றிக் கேடயம் பரிசாக அளிக்கப்படும் என தற்போது போட்டிக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
நான்காம் வகுப்பு பயிலும் எஸ்.எம்.சமீகா பேச்சுப் போட்டியிலும் – ஐந்தாம் வகுப்பு பயிலும் கே. ஆயிஷா பொதுஅறிவுப் போட்டியிலும் -ஐந்தாம் வகுப்பு பயிலும் எஸ்.யு.எஃப். அஹ்மது சஃப்வான் யோகா போட்டியிலும் முதலிடம் பெற்றனர்.
யு.கே.ஜி பயிலும் பி. கதீஜா ஜுவைரிய்யா ஓவியப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.
பரிசளிப்பு விழா எதிர்வரும் 22.12.2012 அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayalconnection.com இணையதளத்தின் நிறுவனர் ஹாஜி S.அக்பர்ஷா B.A., அவர்களை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கும், LKS Gold House Educational & Charitable Trust மூலம் இப்பள்ளி இயங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
12 பள்ளிகள் பங்கேற்ற போட்டியில் காயலுக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தகவல் உதவி : திருமதி. R.மீனாசேகர் – முதல்வர், L.K. Matriculation Higher Secondary School.