கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில், கேரளாவில் வாழும் தமிழக தவ்ஹீத் ஜமாஅத்தினர் மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
2-12-2012 அன்று நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எர்ணாகுளம், திருவனந்தபுரம், பாலக்காடு புதுநகரம், பெரும்பாவூர், சங்கனசேரி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் தனித்தனியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தனர்.
இதனை ஒருங்கிணைக்கும் முகமாக, கேரளாவில் உள்ள அனைத்து கிளைகளையும் இணைத்து, ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொள்ளலாம் என்றும், அனைத்து கிளைகளையும் ஒன்றிணைத்து எர்ணாகுளத்தை மண்டல தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும்போது ஏற்படும் மொழிப்பிரச்சனையை தவிர்ப்பதற்காக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. நிர்வாகத் தொடர்புகளுக்காக மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோழிகோட், திரிச்சூர் ,சாலக்குடி ,எர்ணாகுளம் ,சங்கானசேரி திருவனத்தபுரம் போன்ற ஊர்களில் இருந்து, காயல்பட்டினம் டி.என்.டி.ஜே. சகோதரர்கள் கலந்துகொண்டார்கள்.
கேரள மண்டல நிர்வாகிகள் :
தலைவர் – J.M.A.ஹம்சா – 9388618031
செயலாளர் – மீரான் மைதீன் – 9995349560
பொருளாளர் – A. அஜ்மல் ஹுசைன் – 9388777872 (கோபி)
து. தலைவர் – ஷாநவாஸ் – 9995653690 வண்டிபெரியார்
து.செயலாளர்கள் – சபீருதீன் – 8086142380 – திருவனந்தபுரம்
து.செயலாளர்கள் – முஹம்மது – 9745229875 பெரும்பாவூர்
து.செயலாளர்கள் – ஹாரிஸ் – 9895812092 புதுநகரம்
தகவல் உதவி: செயலாளர், மீரான் மைதீன்