இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் தலைவர் ஜனாப் அப்துல்ரஹீம் அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அன்பின் பெங்களுரு காயல் நலமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்…
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களுரு மாநகரில் வாழும் காயலர்கள், பொதுப்பணியாற்றும் காயல் நலமன்றத்தின் 6வது பொதுக்குழுக் கூட்டம் 09.12.2012அன்று நடைபெறவுள்ளது. இன்ஷாஅல்லாஹ்.
இறையருளால் இம்மடல் தங்கள் அனைவரையும் பூரண உடல் நலமுடனும், தூய நகர்நலச் சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக…
நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 09.12.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் சரியாக 03.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை, Lalbag West Gate – இல் நடைபெறவுள்ளது. ( பழைய இடம் )
தாங்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று, குறித்த நேரத்தில் அவசியம் வந்து கலந்துகொள்ளுமாறும், உங்களுக்கறிமுகமான இதர உறுப்பினர்களுக்கும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டம் குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றிட,
K.K.S. Mohamed Salih அவர்களை 9845005093 என்ற எண்ணிலும்,
M.N Sulaiman அவர்களை 9845203985 என்ற எண்ணிலும்,
Makki Ismail அவர்களை 9901972212 என்ற எண்ணிலும், தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பெங்களூரு காயல் நல மன்றத்திற்காக,
K.K.S.ஸாலிஹ்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம்.
– பெங்களூரு காயல்நலமன்றப் பணி வெல்க! – kayalconnection.com