மாதாந்திரப் பராமரிப்புப் பணியை முன்னிட்டு, மின்வாரியம் 5.12.2012 புதன்கிழமைக் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை நேரமாக அறிவித்துள்ளது.
இந்நேரத்தில் காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. ஏற்கனவே பலமணிநேரங்கள் மின்தடையை அனுபவித்து வரும் மக்களுக்கு, இதுபோன்ற அறிவிப்புக்களால் எவ்வித வருத்தமோ, நெருடலோ ஏற்படுவதில்லை.
மாறாக அமுலிலிருக்கும் மின்தடை நேரத்தில் மேலும் சிலமணிநேரம் இணைகிறதென்றே தங்களுக்குள் ஆறுதலடைந்துக் கொள்கிறார்கள். சுருங்கச் சொன்னால் மாதாந்திரப் பராமரிப்பு நாள் மட்டுமல்ல, எல்லா நாட்களுமே எங்களுக்கு மின்தடை நாள்தான் என விரக்தியில் புன்னகை சிந்துகிறார்கள்.
என்று தணியும் இந்த மின்சாரத் தாகம்? இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும் நாளே நமக்கு இனிய நாள்.
காயலர் நலனுக்காக இச்செய்தி வெளியிடப்படுகிறது.