காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டம் 30-11-2012 வெள்ளிக்கிழமை, நகர்மன்றத் தலைவர் சகோதரி ஐ. ஆபிதா சேக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற 16வது வார்டு உறுப்பினர், ஹாஜி எஸ்.எஸ்.சாமு சகாப்தீன் வெளியூர் சென்றதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
நகராட்சி ஆணையர் திரு. ஜி. அசோக்குமார் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் கூட்டம் நடைபெற துணை புரிந்தனர்.
மாலை 4 மணிக்குத் துவங்கி, இரவு 9 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் 110தீர்மானங்களுக்கான பொருள்கள்(Subjects) விவாதிக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தீர்மான வடிவம் பெற்றன. சில பொருட்கள் தீர்மான வடிவம் பெறாமலும் மற்றும் சில பொருட்கள் மறுபரீசலனைக்காக ஒத்திவைக்கவும்பட்டன.
இக்கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே ஆரோக்கியமான விவாதங்களும், கண்ணியமான கருத்துப் பரிமாற்றங்களும் இடம் பெற்றன.
மரியாதைக்குரிய, நகர்மன்றத் தலைவர் சகோதரி ஐ. ஆபிதா சேக் Bsc., B.Ed.அவர்களின் உயரிய வழிகாட்டலில், அன்பிற்கினிய, துணைத்தலைவர் அவர்களின் தூய ஒத்துழைப்பில், ஆற்றல்மிகு நகர்மன்ற உறுப்பினர்களின் தொய்வில்லா சேவையில் இம்மன்றம் சாதனைகளைக் குவிக்க இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
( நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களின் சுருக்கத் தொகுப்பு அடுத்து இடம்பெறும் )
நிழற்படம் மற்றும் செய்தித் தொகுப்பு:
முதன்மைச் செய்திமுகவர், kayalconnection.com