உள்ளாட்சி அமைப்புக்களின் மூலம் போடப்படும் சாலைகள் பெரும்பாலும் மழைக்காலங்களில் காணாமல் போய்விடுகின்றன.
பொதுவாக இச்சாலைகள் அமைக்கப்படும்போது, காண்பதற்கு மிக எழிலோடு தோற்றமளிக்கிறது. ஆனால், மழை நீருக்கு இவை தாக்குப்பிடிப்பதில்லை. காரணம் தரமற்ற முறையில் இவைகள் அமைக்கப்படுவதே ஆகும்.
மேலும் சிறிய நகரங்களில் இடம்பெறும் மாநில நெடுஞ்சாலைகள் கூட மிக மோசமாக அமைந்து விடுகிறது. அதற்கு நமதூரும் ஓர் எடுத்துக் காட்டு.
இதோ இறுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையால் போடப்பட்டதாகும்.
தரமற்ற இச்சாலைகளால் தள்ளாடும் வாகனங்களை காணீர். இதனால் விபத்து கூட ஏற்படும் ஆபத்து உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் எனக் கூறப்படும் இருவழி (புற)ச் சாலைகள் மட்டும் தற்போது மிகத் தரமாக அமைக்கப்படுகிறது. பழுது ஏற்பட்டாலும் மின்னல் வேகத்தில் சரி செய்யப்படுகிறது.
மற்ற சாலைகள் ஏன் இவ்வாறு தரமாக அமைக்கப்படுவதில்லை?
இதற்கு தீர்வுதான் என்ன? எங்களுக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நிழற்படம்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com