மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 48-வது அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டியின் 13-வது நாளான இன்று (24/05/2013) மாலை நடைபெற்ற போட்டியில்– U.S.C காயல்பட்டினம் எதிர்த்து விக்ரம் பொறியியல் கல்லூரி மதுரை அணி விளையாடியது
போட்டி துவங்கிய 26 வது நிமிடத்தில் U.S.C காயல்பட்டினம் அணி தனது முதல் கோலினை அடித்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் U.S.C காயல்பட்டினம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பாக விளையாடிய விக்ரம் பொறியியல் கல்லூரி மதுரை அணியினர் 47வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து சமண் படுத்தினர்.
தொடர்ந்து ஆட்டநேர இறுதிவரை போராடிய இரண்டு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் U.S.C காயல்பட்டினம் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். இவ்வெற்றியின் மூலம் அந்த அணியினர் நாளை A.S.C. பெங்களூரு அணியினரை எதிர்த்து விளையாட உள்ளனர்
நிலைப்படம் மற்றும் தகவல்: முதன்மை செய்தி முகவர் kayalconnection.com