இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர மாணவர் அணியின் சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் 25-12-2012 அன்று காலை 11 மணி முதல் நண்பகல் வரை இம்முகாம் நடைபெற்றது.
நிலவேம்பு குடிநீர் வழங்கும் இம்முகாமிற்கு, நகர முஸ்லீம் லீக்கின் தலைவர் அல்ஹாஜ் வாவு நாஸர் தலைமையேற்றார்.
முஸ்லிம் லீகின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பேங்காங்க் காயிதே மில்லத் பேரவை தலைவர் அல்ஹாஜ் வாவு சம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
அல்ஹாபிழ் அரபி முகம்மது மெய்தீன் இறைமறை ஓத துவங்கிய இந்நிகழ்ச்சியில், காக்கும் கரங்கள் ஆலோசகர் ஆசிரியர் அப்துர் ரஜ்ஜாக் வரவேற்புரை ஆற்றினார்.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் வாழத்துரை வழங்கினார்.
முகாமினை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மெய்தீன் எம்.ஏ. துவக்கி வைத்தார்.
முஸ்லிம் லீகின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஹாஜி மீராசாகிபு, செயலாளர் மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஹுஸைன் இப்றாஹிம், துணை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.சேக் முஹம்மது, ஹைச். எல். அப்துல் பாஸித், காக்கும் கரங்கள் நிறுவனர் எஸ்.எம்.பி செய்யதகமது அஸ்ஹர் மற்றும் முன்னோடிகள் பங்கேற்றார்கள்.
இம்முகாமில் சில நூறுபேர்கள் பயன் பெற்றார்கள்.
மௌலவி எஸ்.ஹைச். பாதுல் அஸ்ஹப் ஆலிம் பாஸி அவர்கள் துஆவுடன் துவக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிழற்படம்: வீனஸ் மணி, தகவல்: எம்.ஏ.கே. ஜெயினுல் ஆப்தீன்
முன்னதாக நடந்த முகாம்:
மற்றொரு, டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம், இளைஞர் ஐக்கிய முன்னணி மற்றும் காக்கும் கரங்கள் அமைப்புகளின் சார்பில் 23, 24-12-2012 ஆகிய இரு தினங்கள் பெரிய முத்துவாப்பா தைக்காவில் வைத்து நடைபெற்றது.
இம்முகாமில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 2500 பேர் பயன் பெற்றார்கள்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com
முக்கியத்துவம் வாய்ந்த இம்முகாம் தொடர்ந்து நமதூரில் ஆங்காங்கே நடைபெறுவது வரவேற்புக்குரியதும், பொதுமக்களின் நன்றிக்குரியதுமாகும்.
முகாம் அமைப்பாளர்களின் பணி வெல்ல வாழ்த்துகிறோம்.