துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு துளிர் செயலர் சேக்னா லெப்பை தலைமை தாங்கினார்.
ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் A.S. ஜமால் ஹாங்காங் பிரமுகர் T.M.R. மர்ஜூக், ஹாங்காங் காயல் ஐக்கிய பேரவை நிர்வாகி S.M.J. பாக்கர், இலங்கை காயல் நல மன்ற நிர்வாகி ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாங்காங் காயல் நல சங்கத்தின் நிர்வாகி முஹம்மது ஹசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். துளிர் சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலை அரங்க நிகழ்விற்கு S.O.B. ஆயிஷா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சித்திரம்ஜான் நன்றி கூறினார். கலந்து கொண்டோர் அனைவருக்கும் குளிர்பானமும், இனிப்பும் வழங்கப்பட்டது.
நிலைப்படம் மற்றும் தகவல்: துளிர் நிர்வாகம்