காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் அனுசரனையில், காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவில், ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங் என்ற தையல் நிறுவனம் இயங்கிவருகிறது.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரில் கண்டறிய காயல்பட்டினம் வருகை தந்துள்ள அவ்வமைப்பின் உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நாளை ஆகஸ்ட் 12, 2017 காலை 10:00 மணிக்கு வருகை தருமாறு அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் செயலாளர் பி.எம்.ஐ.சவூத் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு..
இறையருளால் நம் மன்றத்தின் அனுசரனையில் நமதூர் காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் இயங்கிவரும் ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரில் கண்டறிய நாளை 12-08-2017 காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் வருகை தந்துள்ள உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்களை அழைத்து வருவதுடன், தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, குறித்த நேரத்தில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
அமைப்பின் சார்பில் அனுப்பப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாதவர்களும், வந்த தகவல்களை இதுவரை பார்க்காதவர்களும், இதையே அன்பான அழைப்பாக ஏற்று கொள்ள வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்று, இம்மை – மறுமையில் நிறைவான நற்கூலிகளை நமக்கு வழங்கியருள்வானாக. ஆமீன்.
தகவல்: A.R. சேக் முஹம்மது