காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஆங்கிலத்துறை மன்றக் கூடுகை 03.08.17 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் திருமதி S. கிருஷ்ணவேணி M.A., M.Phil., வரவேற்புரை வழங்கினார்.
சவுதி அரேபியா, ஜூஸான் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் தமிமுல் அன்சாரி M.A., M.A (Ling)., M.Phil., L.L.B., Ph.D. ‘Effective Oral Presentation’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கிய மாணவி S. சோனியா நன்றியுரை வழங்கினார். இக்கூடுகையில் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. ஆங்கிலத்துறை பேராசிரியர்கள், முதுகலை ஆங்கில இலக்கிய மாணவிகள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
ஆங்கிலத்துறை மன்றத் துணைத் தலைவர் செல்வி D. ப்ரவினா ப்ளஸ்சி ஃப்ளோரிடா M.A., M.Phil., இக்கூடுகையை ஏற்பாடு செய்தார்.
நிலைப்படம் மற்றும் தகவல்: கல்லூரி நிர்வாகம்