காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கை மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் வரமால் தடுக்க எனும் தலைப்பில் பல்லாயிரக்கணக்கில் அச்சிடப்பட்ட பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் விநியோகிக்கப்பட்டதோடு , இல்லம் தோறும் மற்றும் கடற்கரை போன்ற பொது இடங்களிலும் விநியோகிக்கப்பட்டன.
இந்நிலையில் , இன்று முதல் நாளை வரை ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோவில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
Audio
மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் , பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எனும் தலைப்பில் மற்றும் ஒரு பிரசுரம் விநியோகிக்கப்பட உள்ளது.
பிரசுரங்கள் மற்றும் வாகன பிரச்சாரம் ஆகியவற்றிற்கு AYNAZ CONSTRUCTION நிறுவனத்தின் உரிமையாளர் காயல்பட்டினத்தை சார்ந்த வழக்கறிஞர் A.B. ரபீக் அனுசரணையாளராக ஒத்துழைப்பு நல்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வு நடவடிக்கைக்காக நகராட்சிக்கு வரவேற்பையும் , அனுசரணைக்காக காயல் வழக்கறிஞருக்கு நன்றியினையும் ஊர் மக்களின் சார்பில் உரித்தாக்குகின்றோம்.
தகவல்: நகராட்சி வட்டாரம்