காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எம்.எஸ்.சித்தி கதீஜா அவர்கள், 29 -05 -2017 திங்கட்கிழமை இன்று 00:50 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . அவருக்கு வயது 69.
அன்னார், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் மர்ஹூம் அல்ஹாஜ் என்.எஸ்.முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது இஸ்மாஈல் ஆலிம் அவர்களின் மருமகளாரும்,
மரைக்கார் பள்ளி இமாம் அல்ஹாஜ் டீ.எம்.கே.முத்து செய்யிது அஹ்மது அவர்களின் மனைவியும், குருவித்துறைப் பள்ளியின் துணைத் தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.நூஹ் ஹமீத் அவர்களின் சகோதரர் மகளும்,
மர்ஹூம் அல்ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்க் அலீ, மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூசுஃப் ஸாஹிப் சாபு, அல்ஹாஜ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி), அல்ஹாஜ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், அல்ஹாஜ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரி மகளும்,
துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரியும்,
அல்ஹாஜ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் தாயாருமான இவர்கள், அல்ஹாஜ் மன்னர் பாதுல் அஸ்ஹப் அவர்களின் மாமியாரும் ஆவார்கள்.
மேலும் அன்னார் , அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், அல்ஹாஜ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் நூஹ், அல்ஹாஜ் கே.எம்.ஸாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் மச்சியும்,
எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே., ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் சாலிஹ், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல் ஆகியோரின் மாமியாரும், ஹாஃபிழ் பி .ஏ.மன்னர் செய்யித் அப்துர் ரஹ்மான், பி.ஏ.முஹம்மத் சாலிஹ் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,
ஹாஃபிழ் எம்.ஐ.முத்து செய்யித் அஹ்மத், எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையின் தாயாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 29.05.2017. திங்கட்கிழமை இன்று 11 மணியளவில் , காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி : S.K. ஸாலிஹ்