காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்க் அப்துல் காதிர்,26-05-2017 வெள்ளிக்கிழமை இன்று பகல் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அவருக்கு வயது 75.
அன்னார், மர்ஹூம் ச.ம.கு.முஹம்மத் சுலைமான் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் மு.சு.லெ.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மருமகனாரும், எஸ்.எல்.மஹ்மூத் லெப்பை, மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.எல்.முஹ்யித்தீன் தம்பி (ஜின்னா) ஆகியோரின் சகோதரரும்,எஸ்.ஏ.கே.சுலைமான் லெப்பை, எஸ்.ஏ.கே.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் தந்தையுமான இவர்கள்
எம்.டீ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மாமனாரும், எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி, எம்.கே.எம்.முஹ்யித்தீன் தம்பி, மர்ஹூம் எஸ்.எம்.கே.அபூபக்கர் ஸித்தீக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்கள்.
மேலும் அன்னார் , எம்.கே.அபுல் பரக்காத் அவர்களின் மச்சானும், வி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி என்பவரது சகலையும், எம்.ஏ.கே.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஏ.சி.செய்யித் ஹாரிஸ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 26-05-2017 இன்று இரவு 9 மணியளவில் , காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி :S.K. ஸாலிஹ்
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
எல்லாம் வல்ல நாயன்
ஹாஜி .மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து .அவனின் மிக உன்னதமான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் .சுவனபதியை
.கொடுத்தருள்வானாகவும் .ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்..
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்
சவூதி அரேபியா
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருந்தி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கப் பதவியினை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, பொருமைதனை கொடுப்பானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்,
தோஹா கத்தாரில் இருந்து,
V M A உமர் அப்துல்காதர்.