காயல்பட்டினம் நெய்னார் தெரு பிலால் நகரைச் சார்ந்த அல்ஹாஜ் M .N . முஹம்மது அபூபக்கர் பக்ரின் அவர்கள், 26 -05 -2017 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 .45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாருக்கு வயது 82 .
அன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் அ.க. முஹைதீன் நத்தர் சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் சர்வேஜி முஹைதீன் அப்துல் காதர் (மமினாக்கார் ஹாஜி ) அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் M.N. ஹுசைன் ஹல்லாஜ் அவர்களின் சகோதரரும், அல்ஹாஜ் M.A.முஹைதீன் அப்துல் காதர் (மமினாக்கார்) அவர்களின் தகப்பனாருமான இவர்கள் ,
ஜனாப் S.M.A. ஹசன் அவர்களின் மச்சானும், ஹாஜி U.M. மீரா சாஹிப், ஹாஜி A.K. யாசீன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.
மேலும் அன்னார் , M.M. முஹம்மது யஹ்யா உவைஸ், M.M. முஹம்மது அபூபக்கர் பக்ரின் ஹில்மி , M.A.C. முஹம்மது அபூபக்கர் பக்ரின், M.M. முஹம்மது ரஹ்மி, M.A.C. முஹம்மது இபுறாஹிம் ஆகியோரின் அப்பாவும் ஆவார்கள் .
மர்ஹூம் அவர்கள் மஹ்பூபு சுபுஹானி சங்கத்தின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 26 -05 -2017 வெள்ளிக்கிழமை இன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பின் காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .