காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சார்ந்த மாணவர் அஹமது பஷீர் சென்னையில் உள்ள வேலம்மாள் பொன்னேரி பள்ளியில் பயின்று 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதி , 1200 மதிப்பெண்களுக்கு 1173 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் .
முஹம்மது ரயீஸ் , தமீமா ரயீஸ் தம்பதியரின் மகனான இவர், அல்ஹாஜ் 5 லட்சம் A.S.M. மரைக்காயர், தாஹா தம்பதியரின் மகள் வழிப் பேரனும் , அஹமது பஷீர் ,ஜீனத்து நிசா தம்பதியரின் மகன்வழிப் பேரனும் ஆவார் .
உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண்ணான 200 மதிப்பெண்கள் பெற்று வாகை சூடியுள்ளார்.
மிகச் சிறந்த மதிப்பெண்களை முயற்சித்து அடைந்து, பெற்றோருக்கும், பயின்ற பள்ளிக்கும் , பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள இவர் , வருங்காலத்தில் சிகரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.
——————————————————————————————————————————————————————–
பாட வாரியாக மதிப்பெண்கள் . மொழிப்பாடம் -197 , ஆங்கிலம் -185 , இயற்பியல் -200 , வேதியல் -197 ,
உயிரியல் – 200 , கணிதம் – 194
——————————————————————————————————————————————————-
தகவல் : துணி உமர் அன்சாரி