சிங்கப்பூர் காயல் நல மன்றம், நமதூரில் உள்ள மதரஸாக்களில் ஹாஃபிழ் , ஹாஃபிழா பட்டம் பெறும் மாணவ மாணவியர்க்கு ஊக்கத்தொகையாக தலா ரூ 2500 வழங்கி வருவது நாம் அறிந்ததே .
இவ்வருடம் மஹழராவில் நடைப்பெற்ற 150 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் ஹாஃபிழ் பட்டம் பெற்ற நான்கு ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை ரூ 2500 ஐ சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஜனாப் K.M.T. சுலைமான் அவர்கள் வழங்கி கவுரவித்தார்கள்.
நிலைப்படம் மற்றும் தகவல் : K.M.T. சுலைமான்