காயல்பட்டணம் முஹ்யத்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலை பள்ளியில் 18-02-2017 சனிகிழமை அன்று 38 ஆவது விளையாட்டு விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
விளையாட்டு விழா
18-02-2017 சனிக்கிழமை காலை 09:30 மணியளவில் விளையாட்டு விழா பள்ளியின் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி பி.எம்.ஏ. முஹம்மது ஹஸன் B.B.A., C.A., அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். பள்ளியின் நிறுவனர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லதீப் M.A.,
பள்ளியின் தாளாளர் அல்-ஹாபிழ் ஏ.எல்.சம்சுதீன் B.E., பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் B.A., பள்ளியின் இயக்குநர் ரத்னசுவாமி M.A.,B.Ed., பள்ளியின் முதல்வர் டி.ஸ்டீபன் M.Sc.B.ed., தலைமை ஆசிரியை சிரோன்மணி ஜெயமுருகன் M.A., M.phet., B.ed., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் அவர்கள் விளையாட்டு விழாவை முறையாகத் துவக்கி வைத்தார்.
மாணவர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம், பிரமிடு கூட்டு உடற்பயிற்சிகள், சேலை நடனம், ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய அணிகள் இல்ல அலங்காரிப்புகள் போன்றவை கண்ணையும், கருத்தயும் கவர்ந்தன.
இந்நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியைகள் எஸ்.ஜெட்.பாத்திமா, சீரின் B.E., ஆயிஷா சமீனா B.Se., ஆகியோர் நெறிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாட்டினை உடற்பயிற்சி ஆசிரியை ஆர்.சுப்புலட்சுமி சிறப்பாக செய்திருந்தார்.
பரிசளிப்பு நிகழ்ச்சி.
விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் இவ்வூரைச் சார்ந்த பல்வேறு முக்கியஷ்தர்கள் முன்னிலை பொறுப்பேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பரிசளிப்பு நிகழ்வை ஆசிரியைகள் எம்.என்.ஏ.ஹஸீன் முஃப்லிஹா B.Sc.M.B.A., ஆயிஷா சமீனா B.E., காதர் ஆயிஷா M.A. B.ed. ஆகியோர் நெறிப்படுத்தினார்கள்.
பள்ளி ஆண்டு விழா
18-02-2017 சனிக்கிழமை மாலை 04:30 மணியளவில் பள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கிரிஸ்டி மெர்சி எம்.ஏ. எம்.எட். பி.எச்.டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள்.
பள்ளியின் மாணவப் பேரவைத் தலைவர் எஸ்.ஏ.கே. அஹமது பாத்திமா தையிபா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியை சிரோன்மணி ஜெயமுருகண் எம்.ஏ.எம்.பில்.பி.எட். பள்ளியின் 2016-2017 க்கான ஆண்டறிக்கையை சம்ர்ப்பித்தார். பின்னர் சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பதிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு தங்க நாணயமும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ: 1500 மற்றும் ரூ: 1000 வீதம் ரொக்கத் தொகை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
பள்ளியின் ஆசிரியை எஸ்.ஏ.மரியம் பாத்திமா M.Com. B.ed சென்ற வருடம் முழு வருகை பதிவை கூக்கப்படுத்தும் விதமாக தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் மாணவ-மாணவிகளின் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பள்ளி மாணவப் பேரவைத் துணைத்தலைவர் எம்.எம்.செய்யது அஜீபா நன்றியுரையாற்றினார்.
பள்ளி ஆசிரியைகள் பி.எம்.ஆயிஷா சமீஹா B.E., பி.எட். டபில்யு.கே.ஏ.காதிர் ஆயிஷா M.A. B.ed., ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தலைமையாசிரியை, மேலாளர் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக நாட்டுப்பண் மற்றும் சலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுப்பெற்றது.
————————————————————————————————————————————————————————————
ஆண்கள் பிரிவுக்கான நிகழ்ச்சிகள்
19-02-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 04:30 மணியளவில் ஆண்கள் பிரிவு மாணவர்களுக்கான பள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி வாவு எஸ்.கஃப்பார் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதர் அவர்கள், பள்ளியின் நிர்வணர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீப் M.A.,D.Litt. அவர்கள், ஹாஜி கீ.புஹாரி அவர்கள்,
ஹாஜி பாக்கர் சாஹிப் அவர்கள், ஹாஜி டாக்டர் பி.ஏ.எம்.ஜாப்பர் சாதிக், ஹாஜி எம்.எம்.சுல்தான் அவர்கள், மாஸ்டர் எம்.ஏ.புஹாரி அவர்கள், பள்ளியின் இயக்குநர் ஆர்.ரத்தின சாமி M.A., B.ed., அவர்கள், முதலவர் டி.ஸ்டீபன் M.Sc. B.ed, அவர்கள், பள்ளியின் தாளாளர் & செயலாளர் அல்-ஹாபிழ் ஏ.எல்.சம்சுத்தீன், பள்ளியின் துணைச் செயலாளர்கள் கே.எம்.டி.சுலைமான், என்.எம்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் ஆசிரியர் ஜனாப் முஹம்மது ரவூப் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் டி.ஸ்டீபன் M.Sc. B.ed, அவர்கள் பள்ளியின் 2016-2017 க்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் சிறப்பு விருந்தினர் சிறப்புபுரையாற்றினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சி
100,200,400,1500 மீட்டர் ஓட்டம், குண்டு எரியுதல், வட்டு எரியுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஒட்டம் மற்றும் கை பந்து, கால் பந்து, மட்டை பந்து, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஹாஜி எம்.எம்.சம்சுத்தீன், ஹாஜி எஸ்.எல்.புஹாரி மௌலான, ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி எம்.ஐ.முஹம்மது நூகு மற்றும் சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தவர்கள் பரிசுகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைனிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பள்ளி ஆசிரியைகள் ம.கோமதி B.E., மு.கோமதி M.A. தமிழ் பண்டித், சந்தானலெட்சுமி M.A. B.ed, ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.
பள்ளியின் தமிழ் ஆசிரியை மு.கோமதி M.A. தமிழ் பண்டித் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தலைமையாசிரியர், மேலாளர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக நாட்டுப்பண் மற்றும் சலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுப்பெற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல்: A.R. சேக் முஹம்மது , மேலாளர் , முஹைதீன் பள்ளி