காயல்பட்டினம் மஹ்ழரா நகர் பொக்கப்பா தெருவைச் சேர்ந்த (காட்டு மகுதூம் பள்ளியின் பொருளாளர் ) பிரபு எம்.என்.முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப், 24-02-2017 இன்று 5.45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜியூன். அவருக்கு வயது 73.
அன்னார், மர்ஹூம் பிரபு மஹ்மூத் நெய்னா அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் ராவன்னா முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் பிரபு எம்.என்.முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி, பிரபு எம்.என்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும்,
பிரபு எம்.ஏ.மஹ்மூத் நெய்னா (தொடர்பு எண்: +91 90435 96944) என்பவரின் தந்தையும், என்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் (தொடர்பு எண்: +91 90429 20638) என்பவரின் மாமனாரும், எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் சகலையும்,
பிரபு எம்.என்.முஹம்தம் அபூபக்கர், பிரபு எம்.என்.நத்தர் ஸாஹிப், எஸ்.எம்.எஸ்.நத்தர் ஸாஹிப், எஸ்.எம்.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.எம்.எஸ்.மஹ்ரூஸ் லுத்ஃபீ ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 25.02.2017 சனிக்கிழமை நாளை காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்.
தகவலில் உதவி : S.K. ஸாலிஹ்