காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஜனாப் S.I.M.கலீல் அவர்கள், கடந்த இரவு 09.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களுக்கு வயது 77.
அன்னார், மர்ஹூம் S.K.S.செய்யித் இப்றாஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.க.செய்யித் இப்றாஹீம் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் அல்ஹாஜ் S.I.அஹ்மத் ஷாஹுல் ஹமீத் என்ற S.K.அஹ்மத், மர்ஹூம் அல்ஹாஜ் S.I.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற வெள்ளைத் தம்பி, மர்ஹூம் S.I.முஹம்மத் ஹஸன், மர்ஹூம் S.I.காஜா கமாலுத்தீன், மர்ஹூம் S.I.அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும்,
ஜனாப் K.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களின் தந்தையும், ஜனாப் முஹம்மத் லெப்பை அவர்களின் மாமனாரும், ஜனாப் ஹிஜாஸ் முஹம்மத் நூஹ், ஜனாப் அஹ்மத் மீரா லெப்பை ஆகியோரின் மச்சானும், அல்ஹாஜ் B.M.ரஃபீக், ஜனாப் யூஸுஃப் ஆகியோரின் சம்மந்தியுமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷாஅல்லாஹ் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் : எஸ்.கே.ஸாலிஹ்.