தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரர்களுடன் காயல் வீரர்களும் இணைந்தாடும் “KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டி! மே 01 முதல் 07 வரை KSC மைதானத்தில் நடைபெறுகிறது! அணிகள் வரவேற்பு!!
தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரர்களுடன் காயல் வீரர்களும் இணைந்தாடும் “KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டி, மே 01 முதல் 07 வரை KSC மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தலைசிறந்த க்ரிக்கெட் வீரர்களையும், காயல்பட்டினம் க்ரிக்கெட் வீரர்களையும் கொண்டதாக 6 அணிகள் பங்கேற்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 12.00 மணி முதல் 18.00 மணி வரை – என கால அளவைக் கொண்டு, ஒரு நாளுக்கு 3 போட்டிகள் என்ற முறையில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், +91 9840 88 77 27 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு, KBBL நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்: M.B.S.அபூபக்கர் (செய்தி தொடர்பாளர் – KAYAL BIG BASH LEAGUE)