காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நபிகள் நாயகம்(ஸல்)பிறந்த நாள் விழாவும், சமத்துவ பொங்கல் விழாவும் 12.01.2017 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
நபிகள் நாயகம்(ஸல்)பிறந்த நாள் விழா
நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா காலை 9.30 மணியளவில் முதலாமாண்டு வணிகவியல் மாணவி B.M. சேகு ஜாபிரா கிராத் ஓத ஆரம்பமானது. இரண்டாமாண்டு கணிதவியல் மாணவி ராபியா ஹீமைரா வரவேற்புரை வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக காயல்பட்டணம், முஅஸ்கர் ரஹ்மான் அரபிக் கல்லூரி முதல்வர் M.I கதீஜத்துல் குப்ரா ஆலிமா முஅஸ்கரியா ‘அகிலத்துற்கோர் அருட்கொடை அண்ணல் நபிநாயகம்’ என்னும் தலைப்பில் அனைத்;து மாணவியரிடையே சொற்பொழிவாற்றினார் அடுத்தாக ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்னும் தலைப்பில் மாணவிகளுக்கிடையில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இதில் காயல்பட்டணம், முஅஸ்கர் ரஹ்மான் அரபிக்கல்லூரி பேராசிரியைகள் S.M.A. ஹைருன்னிஸா ஆலிமா, S.A.K. ஜெய்னம்பு நாச்சி M.A., ஆலிமா அவர்களும் கல்;லூரி நிர்வாக உறுப்பினர் W.M. நபீஸா B.E ஆலிமாவும் நடுவர்களாக பொறுப்பேற்றனர் மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி பீ.வி பாத்திமா துஆ ஒத இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.
———————————————————————————————————————————————————————————
சமத்துவ பொங்கல் விழா
மதியம் 1 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி நிறுவனர் அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில், கல்லூரிச் செயலர் W.M.M. மொகுதஸீம் B.A., (CS) கல்லூரி, துணைச் செயலர் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா,
கல்லூரி இயக்குநர் முனைவர். மெர்சி ஹென்றி ஆகியோர் முன்னிலையில் ஆரம்பமானது. மாணவியர் துறைவாரியாக பொங்கல் வைத்தும் சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். இவ்விழாவில் கல்லூரி நிர்வாக உறுப்பினர்களும், பேராசிரியைகளும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
தகவல் : கல்லூரி நிர்வாகம்