காயல்பட்டினம் கொச்சியார் தெரு S.A. ஹவ்வா பிள்ளை அவர்கள் , 03 -01 -2017 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது சுமார் 88 .
அன்னார், காயல்பட்டினம் உள்ளாட்சி அமைப்பின் முன்னாள் தலைவர் மர்ஹூம் பாவலர் அல்ஹாஜ் S.S. அப்துல் காதர் அவர்களின் மகளும் , மர்ஹூம் ம.செ முஹம்மது ஈஸா லெப்பை அவர்களின் மனைவியும் , M.E.L. முஹைதீன் அப்துல் காதர் , M.E.L. புஹாரி , M.E.L. யாகூப் , M.E.L. நுஸ்கி ஆகியோரின் தாயாரும், காயல் காக்கும் கரங்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் M.A.K. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கண்ணும்மாவும் ஆவார்கள்.
மர்ஹூமா அவர்களை குறித்த மேலதிக விபரமும் , ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவலும் இன்ஷா அல்லாஹ் பின்னர் இச்செய்தியில் இணைக்கப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் ,, மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக ! ஆமீன் .