பல்கலைக்கழக அளவில் நடைபெறற கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் நம் கல்லூரி மாணவிகளின் சாதனை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி (Athletic Meet) மதுரை எம்.ஜி.ஆர் ஸ்டேடியத்தில் 21.12.2016 முதல் 23.12.2016 வரை ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 29 கல்லூரியைச் சேர்ந்த மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி D. செல்வமணி மூன்றாமாண்டு தமிழ்த்துறை 10 கி.மீ தொலைதூர ஒட்டத்தை 47 நிமிடங்களில் கடந்து முதலாவது இடத்தில் தங்கப் பதக்;கத்தையும், இதே போட்டியில் P. முத்துரமா மூன்றாமாண்டு கணிதவியல் பந்தய தூரத்தை 48 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தில் வெள்ளிப் பதக்கத்தையும்,
தட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் E. கிருபா முதுகலை முதலாமாண்டு வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவி மூன்றாவது இடத்தில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
ஏற்கனவே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 21 கி.மீ போட்டியில் எம் கல்லூரி மாணவியல் முதல் இரண்டு இடங்களை பிடித்ததன் காரணமாக 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பெற்று பல்கலைக்கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் மொத்த 6 பதக்கங்களை பெற்று பல்கலைக்கழக தர வரிசையில் எம் கல்லூரி மூன்றாவது இடத்தைப் பிடித்து பெருமை சேர்த்தனர்.
இந்த சாதனை மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் திருமதி. R. அனிஷ்டா M.P.Ed., M.Phil., SET., அவர்களையும் கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான்,
செயலர் ஹாஜி வாவு W.M.M. . மொகுதஸிம் BA (CS) மற்றும் துணைச் செயலர் ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா எம்.காம்., எம்ஃபில்., பி.எச்.டி, இயக்குநர் முனைவர் திருமதி மெர்ஸி ஹென்றி M.A., Ph.D., மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.