============================================================================================================================
பாரதியார் பிறந்தநாள் விழா
காயல்பட்டணம்இ வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 16.12.16 அன்று மதியம் 2.30 மணி அளவில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. அருணாஜோதி எம்.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி. வரவேற்புரை வழங்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் மெர்சி ஹென்றி எம்.ஏ., பி.எச்.டி. சிறப்பு விருந்தினர் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திரு. சு. அந்தோணி செல்வகுமார் எம்.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி. அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
மன்ற மாணவச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி வி. சண்முகசுந்தரி மன்ற செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர் முனைவர் திரு.சு.அந்தோணி செல்வகுமார் எம்.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி. பாரதியார் வளர்ந்த விதம், சமூக சீர்த்திருத்தவாதிகளாக மாறியது, பெண்விடுதலைக்கு வித்திட்டது என்று பாரதியர் பற்றிய செய்திகளை சிறப்புரை ஆற்றினார்.
மன்ற மாணவத் துணைச்செயலர் இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி சி. நஸ்ரின் பாத்திமா நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இவ்விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியைகளும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறையினர் செய்திருந்தனர்.
=======================================================================================================================
தொலைதூர ஒட்டப்பந்தயத்தில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் சாதனை!!!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான தொலை தூர ஓட்டப்போட்டி 21கி.மீ ( (Inter-collegiate 21km Half Marathon) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியல் கல்லூரி வளாகத்திள் 16ஃ12ஃ2016 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெற்றது இதில் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவிகள் பங்கு பெற்றனர்.
21 கி.மீ தொலை தூர ஒட்டப்பந்தயத்தில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் D.செல்வமணி (முன்றாமாண்டு – தமிழ் துறை) பந்தய தூரத்தை 1 மணி 52 நிமிடங்களில் கடந்து முதலாவது இடத்தையும் P. முத்துரமா (முன்றாமாண்டு – கணிதவியல்) பந்தய தூரத்தை 1 மணி 53 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தையும் பெற்று எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த சாதனை மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநரையும் கல்லூரியின் தலைவர், செயலர் மற்றும் துணைச் செயலர், முதல்வர், இயக்குநர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.
=======================================================================================================================
பெண்கள் கழக சிறப்புக் கூட்டம்
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியல் 22.12.16 அன்று பிற்பகல் 2.00 மணி அளவில் பெண்கள் கழக (Women cell ) சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி S. முத்து பாஹிமா கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. திருமதி சு. ஏஞ்சல் லதா M.A., M.Phil., வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை ஆற்றினார்.
பாளையக்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறைப் பேராசிரியை திருமதி. ஜோ. சிந்தியா ஜீலி B.Sc., PCDAND., M.A., சிறப்பு விருந்தினராக வருகை தந்து ‘ஆரோக்கியமும் உணவுப் பழக்க வழக்கமும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். புரோட்டினின் முக்கியத்துவம் மற்றும் சரிவிகித உணவு முறை பற்றியும் விளக்கவுரை ஆற்றினார்.
வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியை செல்வி த. சாந்தாதேவி MBA., PCP நன்றியுரை ஆற்றினார். முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி . பாத்திமா துஆ ஓத, மாணவிகள் நாட்டுப்பண் பாட பெண்கள் கழகச் சிறப்புக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
=====================================================================================================================