அன்பான காயல் மாநகர மக்களின் கவனத்திற்கு :-
நகராட்சியின் சார்பாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி – 2017 முதல் ஆரம்பமாக இருப்பதால் இது தொடர்பாக ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகள் (பழைய மற்றும் புதிய இணைப்பு) சீர்படுத்தவும்,இணைப்பு இல்லாதவர்களுக்கு இணைப்பு வழங்கவும், கணக்கெடுக்கும் பணி 15-12-2016 முதல் ஆரம்பமாகி உள்ளது.
பொது மக்கள் தங்களின் வீடுகளுக்கு வரும் நபரிடம் தேவை யான தகவல்கள் கொடுத்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கணக்கெடுக்க வரும் நபர்கள் இதுபோன்ற ஒவ்வொரு வார்டுக்குமான அடையாள அட்டையை கொண்டுவருவார்கள்.
இவண், நகராட்சி -காயல்பட்டணம்.
தகவல் உதவி : M.ஜஹாங்கிர்.