மாநபியை எங்கள் மரகதத்தை, பூவுலகின் கோநபியை , சான்றோர் குலவிளக்கை , எமக்களித்த இறைவா! உனக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ் !
பூதளத்தின் இதயமான புகழ் மக்காவில் , நானிலத்து மாந்தர் இனம் நலமே வாழ ,சேதமிலாச் செந்நெறியின் சுடரை ஏந்திச் செம்மையுறு அஹ்மதெங்கள் நபிகள் வந்த நன்னாள் இது ,
ஆம் ! இது ,
அரேபிய நாட்டை உலகின் , நன்கு அறிமுகமாக்கிய விதை நாள் .
உலகின் தேசியத் திருநாள் ,வாழும் உயிர்களின் சுதந்திர பெருநாள் .
நபி பெருமான் தோன்றிய திருநாள் ,நாம் கொண்டாடும் ஆனந்தப் பெருநாள் .
அருள் ஆயிரும் இறங்கும் ஒருநாள்
கண்மணி நாயகமே! தென்றல் வீசும் காலம் வரை , திருவினும் திருவோன் தீர்ப்பளிக்கும் நாள் வரை , தூயவரே! துலங்கட்டும் உங்கள் புகழ்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் , வல்ல அல்லாஹ்வின் அருள் வளங்கள், நம் அனைவர் மீதும் வான் மழையாய் பொழியுமாக ஆமீன் .
கவிதை உதவி :
மாநபியை எங்கள் மரகதத்தை ……… – கவிஞர் மு மேத்தா
பூதளத்தின் இதயமான புகழ் மக்காவில்………… – காயல் பிறைக்கொடியான்
நபி பெருமான் தோன்றிய திருநாள் ………… – ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது மன்பயீ , திண்டுக்கல்
————————————————————————————————————————————————————————————–
பெரிதாகக் காண அழுத்தவும்
தகவல்: ஆன்மீக இசைவாணர் அல்ஹாபிழ் B.S. அஹமது ஸாலிஹ் B.E.,