அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான மாண்புமிகு புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவையொட்டி , காயல்பட்டினத்தில் அனுதாப ஊர்வலமும் , இரங்கல் கூட்டமும் 06 -12 -2016 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் துவங்கி கடற்கரையில் நிறைவடைந்த ஊர்வலத்தின் இறுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ,அனைத்து கட்சி பிரதிநிதிகளும் , ஐக்கியப் பேரவை பிரதிநிதிகளும் பங்கேற்றனர் .
அ.இ.அ.தி.மு.க நகர செயலாளர் எம்.ஜெ.இப்ராஹிம்,
சி.பி.எம். நிர்வாகி பன்னீர் செல்வம்,
தி.மு.க நகர செயலாளர் எம்.டி.ஜெய்னுத்தீன்,
விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன்,
ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் காயல் S.E. அமானுல்லாஹ்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்காப்,
SDPI கட்சியின் நிர்வாகி H. சம்சுதீன்
மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் எம்.கே.ஜாஹிர்,
அம்மா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர்,
மனிதநேய ஜன்நாயக் கட்சியைச் சார்ந்த நஜும் ஆகியோரும் , முஸ்லிம் ஐக்கிய பேரவை துணைச் செயலாளர் A.A.C . நவாஸ் அவர்களும் இரங்கல் உரையாற்றினர்.கூட்டத்தினை அ தி மு க வைச் சார்ந்த இளந்தரி முத்து நெறிப்படுத்தினார் .
இந்நிகழ்வின் இறுதியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர் .
முன்னதாக , காலையில் இருந்தே கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் காயல் நகர் வெறிச்சோடி காணப்பட்டது.
நிலைப்படம் மற்றும் தகவல்: A.R. ஷேக் முஹம்மது