காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும் , சுகாதார நடவடிக்கைகளை இன்னும் சிறப்பாக முறைப் படுத்தவும் வேண்டி நகராட்சி தனி அதிகாரியிடம் திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் M.M. ஷாஹுல் ஹமீது கோரிக்கை மனு அளித்தார்.
இந்த சந்திப்பின் போது, திமுக பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் S.I. அப்துல் காதிர் , நகரச் செயலாளர் M.T. ஜெய்னுத்தீன் , நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் அஜ்வாஜு, ஹாஜி முஹம்மது முஹைதீன் , M. ஜஹாங்கிர் , திமுக வட்டச் செயலாளர் ஹாஜி , மாவட்ட பிரதிநிதி கஸாலி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹசன் , முஸ்லீம் லீக் இயக்கத்தைச் சார்ந்த அல்ஹாஜ் வாவு சம்சுதீன்,ம ம க நகரச் செயலாளர் S.A.K. ஐதுரூஸ் , வாவு வஜீஹா கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் வாவு S.A.R. இஸ்ஹாக் மற்றும் V.K.S. சித்திக் , ஜமால், ஜவஹர் , சதக்கத்துல்லாஹ் , சாளை காதர், நிஜார் , பாதுல் அஸ்ஹாப் , சுல்தான் லெப்பை , கைலானி, N.T. முஹம்மது இஸ்மாயில் , S.A.முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட சமூக நல ஆர்வலர்கள் பலர் இச்சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
கோரிக்கையைப் பெற்றுக் கொண்ட தனி அதிகாரி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
நிலைப்படம் மற்றும் தகவல் : M.M. சாகுல் ஹமீது