காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை பொதுக்குழுக் கூட்டம் ஜலாலைய நிக்காஹ் மஜ்லிஸில் 27 -11 -2016 ஞாயிற்றுக் கிழமை காலை பேரவையின் தலைவர் ஹாஜி அபுல் ஹசன் கலாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பேரவையின் துணைத் தலைவர்கள், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
பேரவை ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேரவையின் செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M. சம்சுதீன் அவர்கள் பேரவையின் முந்தைய செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
அரசு பதிவுக்குரிய பேரவைக்கான சட்டத் திட்ட முன்வடிவு, பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அஹமது அவர்களால் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது . விவாதங்களுக்கு பின் சில திருத்தங்களுடன் அது பொதுக்குழுவில் ஒப்புதலைப் பெற்றது.
பேரவையின் துணைச் செயலர் ஹாஜி S.A. ஜாவாஹிர் அவர்களின் நன்றியுரைக்குப் பின் , துணைத் தலைவர் அல்ஹாபிழ் பாஸுல் அஷ்ஹப் ஆலிம் அவர்களின் துஆவுடன் பொதுக்குழுக்க கூட்டம் நிறைவுப் பெற்றது.